யாழில் இளைஞரின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோபாலசிங்கம் மயூரதன் [வயது 35 ] என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர். உயிரிழந்த இளைஞர் கல்வியில் சிறந்து விளங்கியவர் எனவும் நாளை மறுதினம் இவருடைய 36 வது பிறந்த தினம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இளைஞனின் இந்த விபரீத முடிவிற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது